2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

இரணைதீவில் தங்கி நின்று கடற்றொழில் புரிய அனுமதிக்க வேண்டும்

Sudharshini   / 2016 மார்ச் 06 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

"கிளிநொச்சி, பூநகரி இரணைதீவில் தங்கி நின்று கடற்றொழில் புரிய உரிய அதிகாரிகள் அனுமதிக்க வேண்டும்" என பூநகரி கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத்தலைவர் யோ.பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

'இரணைதீவில் மீள்குடியேற்றம் என்பது இழுபறியாகவுள்ள நிலையில் இரணைதீவிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள், முழுமையாக கடலையே நம்பி வாழ்கின்றனர். தற்போது முழங்காவில் இரணைமாதா நகரில் வறுமையில் வாடுகின்றனர். இந்நிலையில் இரணைதீவிற்குச் சென்று தங்கிநின்று தொழில்புரிய அனுமதிக்கவேண்டும்' என்றார்.

'அத்துடன், பூநகரிக் கடற்பரப்பில் இழுவைப்படகுகளின் தொழில் அதிகரித்துக் காணப்படும் நிலையில், அத்தொழிலினைக் கட்டுப்படுத்தவேண்டும். இல்லையேல் எமக்கும் இழுவைப்படகுத் தொழிலுக்கான அனுமதியினைத் தாருங்கள் என யோ.பிரான்சிஸ்; மேலும் தெரிவித்தார்'.

கடந்த 02ஆம் திகதி இடம்பெற்ற பூநகரி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் சமாசத்தலைவர் இக்கோரிக்கையை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X