Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Sudharshini / 2016 ஏப்ரல் 02 , மு.ப. 10:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராசா கிருஸ்ணகுமார்
இரணைமடுக்குளத்தின் புனரமைப்புப் பணிகள் நடைபெறுவதன் காரணமாக இவ்வாண்டு இரணைமடுக்குளத்தின் கீழான சிறுபோக நெற்செய்கை இடம்பெறமாட்டாது. இதன் காரணமாக அக்கராயன்குளத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் சிறுபோக நெற்செய்கைதான் இவ்வாண்டு காலபோகத்திற்கான மாவட்டத்தின் விதைநெல்லினை தீர்மானிக்கப்போகின்றதென கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் நவரத்தினம் சுதாகரன் தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை (01) கிளிநொச்சி அக்கராயன்குளத்தின் கீழான சிறுபோக நெற்செய்கைக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 'இரணைமடுக்குளத்தின் கீழே இவ்வாண்டு சிறுபோக நெற்செய்கையினை மேற்கொள்ளமுடியவில்லை. ஆனால், அக்கராயன்குளத்திலே சிறுபோகத்தினை சிறப்பாக செய்துமுடிக்கவேண்டுமென்ற நிர்ப்பந்தமான நிலையிலுள்ளோம். அக்கராயன்குளத்தின் அபிவிருத்தியிலும் விவசாயிகளின் வாழ்வாதார மேம்பாட்டிலும் மாவட்டச் செயலகமும் எமது திணைக்களமும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது.
அக்கராயன்குளத்தில் 2010ஆம் ஆண்டு காலப்பகுதியில் பல நெருக்கடிகளை சந்தித்திருக்கின்றோம். குளம் உடைப்பெடுக்கக் கூடிய அபாயநிலையிலிருந்தது. எமக்கு ஒரு சவாலான விடயமாகவுமிருந்தது. அபிவிருத்தி செய்வதில் நெருக்கடியிருந்தது.
குளத்தின் கீழே உடைப்பெடுக்கக்கூடிய பெருங்குழிகள் இருந்தன. பலமுயற்சிகளை நாம் எடுத்தோம். வான்வெள்ளம் பாய்கின்றபோது கட்டுமானங்கள் எத்தனை தடவைகள் உடைவுகள் ஏற்பட்டதென்பது எல்லோருக்கும் தெரியும். உடைவுகள் ஏற்பட்டபோதெல்லாம் நாம் முயற்சிகளை விடவில்லை. அக்கராயன்குளத்தின் கீழே பெருங்குளங்கள் இல்லை. குடமுருட்டிக்குளம் இருந்தாலும் கூட அக்கராயன்குளத்திலிருந்து பெருமளவு நீரை வெளியில் விடுகின்றோம் என்ற கவலையிருந்தது.
நல்லதொரு சந்தர்ப்பம் 2010 இற்குப் பிறகுதான் ஏற்பட்டது. இக்குளத்தின் கீழுள்ள விவசாயிகள் இக்குளத்தினை முழுமையாகப் பயன்படுத்தவேண்டும். சிறுபோக நெற்செய்கையை முழுமையாக செய்ய வேண்டுமென்பதில் முனைப்பாக இருந்தனர். கடந்தாண்டு கூட அதற்கான முயற்சிகளை நெருங்கியிருந்தோம். 2,700 ஏக்கர் வரை முழுமையான நீர்ப்பாசனம் செய்யக்கூடிய நிலையிருந்தும் அதனை செய்யமுடியாத நிலையிருந்தது.
இதேவேளை, அக்கராயன்குளத்தின் கீழ் இவ்வாண்டு 2,790 ஏக்கரில் நெற்செய்கையும் 240 ஏக்கரில் உபபயிர்ச்செய்கையும் மேற்கொள்வதென அக்கராயன்குளத்தின் கீழான சிறுபோக நெற்செய்கைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், தற்போது அக்கராயன்குளத்தில் நெருக்கடிகளுக்கு மத்தியில் நூறுவீதம் நீர்வழங்கக் கூடிய நிலைமையேற்பட்டுள்ளது. சிறுபோகத்தில் அக்கராயனில் செய்கைப்பண்ணப்படும் நெல்தான் மாவட்டத்தின் காலபோகத்திற்கான விதை நெல்லினை தீர்மானிக்கப்போகின்றதெனவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago