Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Niroshini / 2016 மார்ச் 31 , மு.ப. 09:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி கல்வி வலயத்தில் தற்போது 20 பாடசாலைகள் குடிநீர் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் கந்தசாமி முருகவேல் வியாழக்கிழமை (31) தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் வரட்சி நிலவரம் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
பூநகரி மத்திய கல்லூரியில் நிலவும் குடிநீர்ப் பிரச்சினைக்கு அருகிலுள்ள கிணறிலிருந்து நீரைப் பெற்றுக் கொள்வதற்கான வழியேற்படுத்தப்பட்டுள்ளது. வரட்சித் தன்மை அதிகரித்துச் செல்லும்போது கூடுதலான பாடசாலைகளில் குடிநீர் நெருக்கடி தோன்றும்.
அக்கராயன் மகா வித்தியாலயம் போன்ற பாடசாலைகளில் குடிநீர் நெருக்கடியுள்ளது. புனரமைப்புக்காக இரணைமடு குளத்து நீர் திறந்து விடப்படாமையால் வட்டக்கச்சி பகுதியில் கிணறுகளில் நீர் குறைவடைந்து நீர்ப்பிரச்சினை காணப்படுகின்றது.
கிளிநொச்சி நகரப் பாடசாலைகளிலும் குடிநீர் நெருக்கடி ஏற்படத் தொடங்கியுள்ளன. இது தொடர்பாக கிளிநொச்சி மாவட்டச் செயலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago