Editorial / 2019 ஓகஸ்ட் 18 , பி.ப. 04:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.தமிழ்ச்செல்வன்
கிளிநொச்சி - கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட உமையாள்புரம் கிராமசேவகர் அலுவலர் பிரிவில், வரட்சியால் பாதிக்கப்பட்ட சுமார் 300 குடும்பங்களுக்கு இராணுவத்தினர் குடிநீர் வழங்கி வருகின்றனர்.
உமையாள்புரம் பிரதேசம் உவராலும் வரட்சியாலும் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசம் என்பதால், வருடத்தின் பெரும்பாலான நாள்கள் குடிநீர் விநியோகிக்க வேண்டிய பிரதேசமாகும்.
எனவே, இங்கு திணைக்களங்களால் வழங்கப்படுகின்ற குடிநீர் போதுமானதாக இன்மையால், இராணுவத்தினரும் மேலதிகமாக குடிநீர் விநியோகத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .