Niroshini / 2021 ஜனவரி 07 , பி.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.தமிழ்ச்செல்வன்
வைத்தியசாலையில் மரணித்த யாசகர் ஒருவரின் பையில் 1 இலட்சத்து முப்பதாயிரத்துக்கும் மேல் பணம் காணப்பட்ட சம்பவம் ஒன்று, கிளிநொச்சியில், இன்று (07) இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில், கடந்த மூன்று நாள்களாக கிசிச்சை பெற்று வந்த குறித்த யாசகர் இன்று உயிரிழந்தார்.
இவர் கிளிநொச்சி நகர பிள்ளையார் கோவில், வங்கிகளுக்கு முன்னாள் நின்று யாசகம் பெற்று வந்தவர் என்று தெரியவந்துள்ளது.
அவர் மரணித்த பின்னர், அவர் வைத்திருந்து பழைய பைகளை சோதித்து பார்த்த பொது, அவற்றில் 1 இலட்சத்து முப்பதாயிரத்துக்கும் மேல் பணம் இருந்தமை வைத்தியசாலையால் கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன், இவருடைய உறவினர்கள் எவருடனும் தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
48 minute ago
4 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
4 hours ago
4 hours ago
4 hours ago