2025 ஜூன் 30, திங்கட்கிழமை

எனது கணவரை கடத்தியவர்களை அடையாளம் காட்ட முடியும்

Niroshini   / 2016 மார்ச் 29 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

'வவுனியா, கல்மடு - ஈச்சங்குளம் வீதியில் வைத்து எனது கணவரை 57ஆவது படைப்பிரிவு இராணுவம் வெள்ளை வேனில் கடத்திச் சென்றதைக் கண்டேன். அந்த இராணுவ வீரர்ககளை இப்பொழுதும் என்னால் அடையாளம் காட்ட முடியும்' என முல்லைக்குளம், கல்மடுவில் பகுதியைச் சேர்ந்த பேரின்பராஜா பாலேஸ்வரி என்ற பெண் சாட்சியமளித்தார்.

காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை செய்யம் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் இன்று செவ்வாய்க்கிழமை வவுனியா பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு சாட்சியமளித்தார்.

அவர் தனது சாட்சியத்தில் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 2007ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 08ஆம் திகதி  எனது கணவர் எமது பகுதியில் வசிக்கும் ஒருவருடன் மோட்டர் சைக்கிளில் வவுனியா நகரத்துக்கு சென்றார். காலையில் சென்றவர் 11.30 மணியளவில் வங்கியில் பணத்தை வைப்புச் செய்து விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

ஈச்சங்குளத்துக்கும்  கல்மடுவுக்கும் இடையில் அமைக்கப்பட்டிருந்த இராணுவ காவலரண்கள் இரண்டின் அருகே வீதி தடை போடப்பட்டு மக்கள் அவ்வீதியால் செல்ல விடாமல் தடுக்கப்பட்டது. இதன்போது அந்த இராணுவக் காவலரண் இரண்டும் அமைந்துள்ள பகுதிக்குள் வைத்து எனது கணவன் பேரின்பராஜா (வயது 34) மற்றும் அவருடன் சென்ற உதயகுமார் ஆகிய இருவரையும் 57ஆவது படைப்பிரிவு இராணுவத்தினர் மோட்டர் சைக்கிளில் இருந்து இறக்கி வெள்ளை வேனில் ஏற்றிச் சென்றனர்.

இதன்போது, எனது சகோதரியின் வீட்டில் இருந்த நான் எனது கணவனை கடத்தும் போது கண்ணால் கண்டேன். அந்த இராணுவ வீரர்ககளை இப்பொழுதும் என்னால் அடையாளம் காட்ட முடியும்' என்றார்.

'நான் கணவன் நின்ற இடத்துக்குச் செல்ல முற்பட்ட போது, காவலரணில் இருந்த இராணுவத்தினர் என்னை செல்லவிடவில்லை. ஒரு காவலரணில் ஜெயவர்த்தன என்ற இராணுவ வீரர் இருந்தார். அவருக்கும் கடத்திய இராணுவத்தினரை தெரியும்.

அதன்பின் நான் இராணுவத்திடம் கேட்ட போது தாம் கடத்தவில்லை எனக் கூறிவிட்டார்கள். அதன்பின் பொலிஸ் நிலையம், மனித உரிமை ஆணைக்குழு, இராணுவ முகாம் என  எனது மூன்று பெண் பிள்ளைகளுடனும் ஏறி இறங்கி வருகின்றேன்' என கண்ணீர் மல்க தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X