2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

‘எம்மை சற்று திரும்பிப் பாருங்கள்’

Editorial   / 2017 நவம்பர் 02 , பி.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தேராவில் கிராமத்தில் உள்ள மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முன்வருமாறு, அரச அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும், அப்பகுதி மக்கள் அழைப்பு விடுக்கின்றனர்.  

குறிப்பாக, தமது கிராமத்துக்குச் செல்லும் வீதிகள் செப்பனிடப்படவில்லை. குடிநீர் பிரச்சினை, வீட்டுத்திட்டப் பிரச்சினை, வாழ்வாதாரப் பிரச்சினை, புனர்வாழ்வுப் பெற்ற முன்னாள் போராளிகள் எதிர்நோக்கும் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன. எனவே, அதிகாரிகள், அரசியல்வாதிகள் எமது கிராமத்தில் நிலவும் குறைகளை நேரில் வந்து அவதானித்து அவற்றை சீர்செய்து தரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .