Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
George / 2016 ஜூன் 01 , மு.ப. 07:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
வழங்கப்பட்ட அனுமதிபத்திரத்தின் நடைமுறையினை மீறி, வெற்றிலைக்கேணி கடற்பரப்பினுள் நுழைந்து கடலட்டை பிடிக்க முற்பட்ட 9 தென்னிலங்கை மீனவர்களுக்கு, தலா 7,500 ரூபாய் அபராதம் விதித்து கிளிநொச்சி மாவட்ட நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா, செவ்வாய்க்கிழமை (31) தீர்ப்பளித்தார்.
முல்லைத்தீவு கடற்பரப்பில் கடலட்டை பிடிப்பதற்கு அனுமதிபெற்ற மேற்படி மீனவர்கள், 3 படகுகளில் வெற்றிலைக்கேணி கடற்பரப்புக்குள் திங்களன்று (30) நுழைந்து, கடலட்டை பிடிக்க முற்பட்டுள்ளனர். அப்பகுதியில் ரோந்து கடமையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர், அவர்களைக் கைதுசெய்து விசாரணை செய்தபோது, அனுமதிபத்திரத்தின் நடைமுறையினை மீறி செயற்பட முனைந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
கைதான அனைவரும் கடற்றொழில் நீரியல்வளத்துறை யாழ். மாவட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். 9 மீனவர்களையும் சான்றுப் பொருட்களையும் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது, மீனவர்கள் தங்களது குற்றங்களை ஏற்றுக்கொண்டனர்.
வழக்கினை விசாரித்த நீதவான், தலா 7,500 ரூபாய் அபராதம் விதித்ததுடன் கைப்பற்றப்பட்ட சான்றுப் பொருட்களை மீண்டும் மீனவர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago