2025 ஜூன் 30, திங்கட்கிழமை

கரைச்சியின் அபிவிருத்திக்கு ரூ.1,346 மில்லியன் தேவை

Sudharshini   / 2016 ஏப்ரல் 03 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி கரைச்சிப் பிரதேச சபையின் கீழ் 2016ஆம் ஆண்டில் 135 வேலைத்திட்டங்களை மேற்கொள்வதற்கு 1,346.66 மில்லியன் ரூபாய் நிதி தேவைப்படுவதாக பிரதேச சபை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கரைச்சி பிரதேச சபையின் கீழுள்ள கிராமிய வீதிகள் கடந்த கால ஆண்டுகளாக புனரமைக்கப்படாத நிலையில் காணப்படுவதுடன், பல்வேறு இடங்களிலும் சந்தைக் கட்டடத்தொகுதிகள் உள்ளிட்ட பல்வேறு கட்டுமானத்தொகுதிகள் மேற்கொள்ளப்;படவேண்டிய நிலை காணப்படுகின்றது.

கிராமிய வீதிகள் புனரமைப்பு, சந்தைக்கட்;டடம் அமைத்;தல், குடிநீர் விநியோக திட்டங்கள் மற்றும் மலசலகூடங்கள் அமைத்தல் போன்ற 135 வேலைத்திட்டங்களுக்கு 1,346.66 மில்லியன் ரூபாய் நிதி தேவையென மதிப்பிடப்பட்டுள்ளது.

இதில் 71 திட்டங்கள் மாகாணத்துகென குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதி மற்றும் மாகாண நிதி ஆகியவற்றின் மூலம் ரூ. 245.61 மில்லியன் ரூபாய் செலவில் இவ்வாண்டு மேற்கொள்ளப்படவுள்ளது. ஏனைய திட்டங்களுக்கான நிதி இதுவரையில் நிதி மூலம் இனங்காணப்படவில்லையென சபையின் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X