Niroshini / 2020 டிசெம்பர் 28 , பி.ப. 01:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி வலயத்தில் மூடப்பட்டுள்ள வன்னேரிக்குளம் - குஞ்சுக்குளம் கிராமத்தின் கணேசா வித்தியாலயத்தை மீள இயக்குமாறு, கிளிநொச்சி வலய அதிகாரிகளிடம் மணியங்குளம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில், தற்போது 08 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. குஞ்சுக்குளம் கிராமத்தின் கணேசா வித்தியாலயம் 2009ஆம் ஆண்டுடன் மூடப்பட்டுள்ள பாடசாலையாக காணப்படுகின்றது.
காரணம,; குஞ்சுக்குளம் கிராமம் முழுமையாக உவரடைந்து மக்கள் இடம் பெயர்ந்தமையாலேயே, பாடசாலை மூடப்பட்டுள்ளது.
குறித்த பாடசாலையை இயக்குவதன் மூலம் குறித்த கிராமத்தில் உள்ள ஆரம்பப் பிரிவு மாணவர்கள் பெரும் நன்மையடைவார்களென்று, அப்பகுதி மக்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
19 minute ago
14 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
14 Nov 2025