2025 மே 15, வியாழக்கிழமை

கேப்பாப்பிலவில் இருந்த 24 பேருக்கு கொரோனா

Editorial   / 2020 செப்டெம்பர் 21 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு வருகைதந்த 257 பேர் ஓகஸ்ட் 02ஆம் திகதி கேப்பாப்பிலவு விமானப்படைத்தளத்தில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

இவர்களுக்கான பி.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு கட்டம் கட்டமாக வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்ட போது, 24 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், சனிக்கிழமை (19) 8 பேர் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

இன்னும் 10 பேர் தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .