2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

குடிநீர் விநியோக புனரமைப்புத் திட்டம்

George   / 2016 மார்ச் 22 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்
 
கிளிநொச்சி கரைச்சி கண்டாவளைப் பிரதேசத்தின் குடிநீர் விநியோக புனரமைப்புத் திட்டம் 1,940 மில்லியன் ரூபாய் செலவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
 
கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி மற்றும் கண்டாவளை ஆகிய பிரதேசங்களுக்கான குடிநீர் விநியோகத்திட்டம் கடந்த கால யுத்தம் காரணமாக சேதமடைந்;திருந்த நிலையில் தற்போது இதன் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்;பட்டு வருகின்றன.
 
கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள மக்களுக்கான குடிநீர் விநியோக நடவடிக்கைகளை மேற்கொள்;ளும் பொருட்டு, இரத்தினபுரம் பகுதியிலும் பரந்தன் குமரபுரம் பகுதியிலும் குடிநீர் விநியோகத்திற்கான பாரிய நீர்த்தாங்கிகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
 
மேற்;படி திட்டத்தின் மூலம் கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி மற்றும் கண்டாவளை ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளில் உள்ள 20 கிராம அலவலர் பிரிவுகளைச் சேர்ந்த 40 ஆயிரம் பேருக்கு குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் இதன் 95 வீதமான பணிகள் நிறைவு பெற்றுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
குடிநீர்  விநியோகத்திட்டத்துக்கான புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தபோதும் வெடிபொருட்கள் மற்றும் பல்வேறு காரணங்;களால் இதன் பணிகளை துரித கதியில் முன்னெடுக்;க முடியாத நிலை காணப்;பட்டது என்றும் தெரிவிக்கப்;பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜப்பானிய அரசின் 1,200 மில்லியன் ரூபாய் நிதியிலும் இலங்கை அரசின் 740 மில்லியன் ரூபாய் நிதியிலும் என மேற்படி குடிநீர் விநியோகத்திட்டம் 1,940 மில்லியன் ரூபாய் செலவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X