2025 ஜூன் 30, திங்கட்கிழமை

கேப்பாப்புலவு உண்ணாவிரதத்தை கைவிடுமாறு முதலமைச்சர் கோரிக்கை

Niroshini   / 2016 மார்ச் 26 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்புலவு கிராம மக்கள் முன்னெடுத்துவரும் உண்ணாவிரத போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருமாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியுள்ளார்.

முல்லைத்தீவு, கேப்பாப்புலவு மக்கள் தங்களின் காணிகள் விடுவிக்கப்படவேண்டும் எனக் கோரி வியாழக்கிழமை (24) முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று சனிக்கிழமை மூன்றாவது நாளாகவும் தொடர்கின்ற இவ் உண்ணாவிரதத்தை நிறைவு செய்யுமாறு முதலமைச்சர் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மூலம் கோரியுள்ளார்.

1 வார காலத்துள் 3 பேர் கொண்ட குழுவை நியமித்து, இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு
முயற்சிப்பதாகவும் இப்பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதிக்கு அறிவித்து 3 மாதத்துள் தீர்வு காண்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், உண்ணாவிரதம் இருந்த ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பது தொடர்பில் கவனம் செலுத்துவதாகவும் நடவடிக்கை எடுக்க ஒத்துழைப்பு தருமாறும் முதலமைச்சர் கோரியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X