2025 ஜூன் 30, திங்கட்கிழமை

கேப்பாப்புலவில் உண்ணாவிரதப் போராட்டம்

Menaka Mookandi   / 2016 மார்ச் 24 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

தம்மை தமது சொந்த இடத்தில் குடியமர்த்துமாறு வலியுறுத்தி, முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்புலவு மாதிரிக்கிராம மக்களால் இன்று வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

காலை பத்து மணிக்கு, கேப்பாப்புலவு மாதிரிக்கிராம பிள்ளையார் ஆலய முன்றலில் இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவருக்கு ஆதரவு தெரிவித்து ஊர்மக்களும் இந்ந போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த போராட்டத்தில் ஈடுபடுபவர், தனக்கு ஜனாதிபதியினுடைய எழுத்துமூல உறுதிமொழி கிடைகும்வரை (தனது காணியில் மீளக்குடியமர்த்துவதாக) இந்தப் போராட்டம் தொடருமென தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X