2025 ஜூன் 30, திங்கட்கிழமை

கிராம அபிவிருத்தி சங்கங்களின் புதிய நிர்வாகத்தெரிவு

Thipaan   / 2015 டிசெம்பர் 26 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் கிராம அபிவிருத்தி, மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களின் சமாசத்தலைவராக துரைராசா ரவிகரன் மீண்டும் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த சமாசத்தின் புதிய நிர்வாகத்தெரிவானது முல்லைத்தீவு மாவட்டச் செயலக மண்டபத்தில் கடந்த 23ஆம் திகதி நடைபெற்றது.

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில், கொக்கிளாய் தொடக்கம் மாத்தளன் வரையான கரையோரக்கிராமங்களும் குமுழமுனை ஆறுமுகத்தான்குளம் தொடக்கம் கோப்பாபிலவு வரையான 46 கிராம அலுவலர் பிரிவுகளிலுமாக 107 பதிவு செய்யப்பட்ட சங்கங்கள் இயங்குகின்றன.

அந்தவகையில் இச்சங்கங்களுக்கான புதிய நிர்வாகத்தெரிவு இடம்பெற்றது.

இதன்போது தலைவராக துரைராசா ரவிகரன், உபதலைவராக எஸ்.இராஜேஸ்வரன், செயலாளராக பெ.நந்தகுமாரன், உபசெயலாளராக திருமதி.இராஜலட்சுமி, பொருளாளராக திருமதி சுகந்தி, 12 நிர்வாக உறுப்பினர்களும் இதன்போது தெரிவு செய்யப்பட்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X