2025 ஜூன் 30, திங்கட்கிழமை

கால்நடைகளால் நெற்செய்கையாளர்கள் பாதிப்பு

George   / 2015 டிசெம்பர் 18 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

தற்போது காலபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலர் பிரிவில் வயல்களில் கால்நடைகள் நடமாடித் திரிவதால் விவசாயிகள் பெரும் இடர்களை எதிர்கொண்டுள்ளனர்.

துணுக்காய் பிரதேச செயலர் பிரிவில் நடாத்தப்பட்ட காலபோக நெற்செய்கைக் கூட்டங்களில் காலபோக நெற்செய்கைக் காலத்தில் கால்நடை வளர்ப்பாளர்கள் கால்நடைகளை கட்டுப்படுத்த வேண்டுமென்ற இறுக்கமான முடிவுகள் எடுக்கப்பட்டது.

இந்நிலையிலும், கால்நடைகள் கட்டுப்படுத்தப்படாமையினால் துணுக்காய் விவசாயிகள் இடர்களை எதிர்கொண்டுள்ளனர்.

விவசாயிகள் எதிர்கொள்ளும் இடர்கள் தொடர்பாக துணுக்காய் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தரிடம் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X