2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுபோக நெற்செய்கை வேகமாக இடம்பெறுகின்றது

Sudharshini   / 2016 மே 08 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி மாவட்டத்தில் இரணைமடுக்குளம் தவிர்ந்த ஏனைய குளங்களின் கீழான சிறுபோக நெற்செய்கை விதைப்பு வேகமாக நடைபெற்று வருகின்றது.

அக்கராயன்குளத்தின் கீழ் 2,790 ஏக்கரிலும் கல்மடுக்குளத்தின் கீழ் 1,350 ஏக்கரிலும், வன்னேரிக்குளத்தின் கீழ் 121 ஏக்கரிலும், கரியாலைநாகபடுவான்குளத்தின் கீழ் 500 ஏக்கரிலும், குடமுருட்டிக்குளத்தின் கீழ் 330 ஏக்கரிலும், பிரமந்தனாறு குளத்தின் கீழ் 450 ஏக்கர் மேட்டுப்பயிர்செய்கையும்;, கனகாம்பிகைக்குளத்தின் கீழ் 260 ஏக்கர் மேட்டுப்பயிர்ச்செய்கையும், புதுமுறிப்புக்குளத்தின் கீழ் 835 ஏக்கரிலும் சிறுபோக நெற்செய்கை விதைப்புகள் வேகமாக மேற் கொள்ளப்பட்டுள்ளன..

இரணைமடுக்குளத்தின் புனரமைப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதன் காரணமாக இரணைமடுக்குளத்தின் கீழான சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்படவில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X