Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Princiya Dixci / 2016 ஏப்ரல் 05 , மு.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி மாவட்டத்தில் வசிக்கும் மக்களில் 15,223 குடும்பங்களுக்கு இன்னமும் மின்சாரம் வழங்கப்படாமல் இருப்பதாக மின்சார சபையின் கிளிநொச்சி அலுவலக புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாவட்டத்தில் தற்போது 41 ஆயிரத்து 934 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களில் 26 ஆயிரத்து 737 குடும்பங்களுக்கு மின்சார இணைப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.
7,891 குடும்பங்கள் வசிக்கும் பிரதேசங்களுக்கு மின்சார இணைப்புக்கள் வழங்கப்பட வேண்டிய தேவையுள்ளது.
அதாவது, கரைச்சிப் பிரதேசத்தில் 5,267 குடும்பங்களும் கண்டாவளைப் பிரதேசத்தில் 1,244 குடும்பங்களும், பூநகரிப் பிரதேசத்தில் 786 குடும்பங்களும், பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் 594 குடும்பங்களும் என 7,891 குடும்பங்;கள் வாழ்ந்து வரும் பகுதிகளில் மின்சார கட்டுமான வசதிகள் இன்னமும் மேற்கொள்ளப்படவில்லை.
இதனைவிட 7,332 குடும்பங்கள் வாழ்கின்ற பிரதேசங்களில் மின்சார கட்டுமானங்கள் செய்யப்பட்டுள்ள போதும், அவர்கள் தங்கள் வீட்டு மின்சுற்றைப் பொருத்தாமல் இருத்தல் உள்ளிட்ட சில காரணங்களால் அவர்களுக்கும் மின்சாரம் வழங்கப்படவில்லை என மின்சார சபைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago