Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2015 டிசெம்பர் 14 , மு.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி மாவட்டத்தில் வசிக்கும் 04 ஆயிரத்து 224 குடும்பங்களுக்கு காணிகள் இல்லாமையால், அவர்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்க முடியாமல் உள்ளதாக அம்மாவட்டச் செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிளிநொச்சி மாவட்டத்தில் 2009ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் மீள்குடியேற்றத்துக்கு அனுமதிக்கப்பட்டு, மக்கள் மீள்குடியேறினர். இதுவரையில் 42 ஆயிரத்து 862 குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இவர்களில் 15 ஆயிரத்து 592 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் இல்லை. நிரந்தர வீடுகள் இல்லாதவர்களில் காணி இல்லாமல் 4,224 குடும்பங்கள் உள்ளன. மத்திய வகுப்புத் திட்டத்தின் கீழ் காணிகள் வழங்கப்பட்டு, காணி உறுதிப்பத்திரங்கள் இல்லாமல் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக அந்தக் காணிகளில் வசித்து வரும் சுமார் 1,500 குடும்பங்களும் இதில் அடங்குகின்றன.
மக்கள் மீள்குடியேறி பயிர்ச்செய்கை மேற்கொண்டு வரும் நிலப்பரப்பில் 02 ஆயிரத்து 930 நிலப்பரப்பு இன்னமும் வனவள திணைக்களத்துக்குச் சொந்தமானதாகக் காணப்படுகின்றதாகவும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago