Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
George / 2016 மே 16 , மு.ப. 11:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
வவுனியாவில் கடந்த சில மாதங்களாக இடம்பெற்ற சங்கிலி அறுப்புச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்ட இரண்டு நபர்கள் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார், திங்கட்கிழமை தெரிவித்தனர்.
வைரவபுளியங்குளம் மற்றும் வேப்பங்குளம் பகுதியைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தனிமையில் செல்லும் பெண்களை இடைமறித்து, வீட்டு விலாசம் கேட்பது போல் பாசாங்கு செய்து, அவர்கள் அணிந்திருந்த தங்க சங்கிலியை அறுத்துச் சென்ற பல சம்பவங்கள் தொடர்பில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த வவுனியா குற்றத் தடுப்பு பிரிவினர் சந்தேகநபர்களை கைதுசெய்தனர்.
கடந்த வருடம் செப்டெம்பர் 14ஆம் திகதி வவுனியா, உங்குளாங்குளம் பகுதியில், வீதியில் சென்ற பெண்ணிடம் அறுக்கப்பட்ட சங்கிலி மற்றும் கடந்த மார்ச் மாதம் 19ஆம் திகதி வவுனியா, சாந்தசோலை சந்தியில் கர்ப்பிணிப் பெண்ணிடம் இருந்து அறுக்கப்பட்ட சங்கிலி என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
தொடர்ந்து, சந்தேகநபர்களை வவுனியா நீதிமன்றில்ஆஜர்செய்த போது அவர்களை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago