2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

சட்டவிரோமாக மணல் அகழும் வாகனங்கள் அரசுடமையாக்கப்படும்

Niroshini   / 2016 மே 10 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

'கிளிநொச்சி மாவட்டத்தில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்ந்து, கடத்துவதற்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் இனிவரும் காலங்களில் அரசுடமையாக்கப்படும்' என கிளிநொச்சி மாவட்ட நீதவான் ஏ.ஏ.ஆனந்தராசா இன்று செவ்வாய்க்கிழமை (10) அறிவித்துள்ளார்.

கிளிநொச்சி நகரை அண்மித்த பகுதிகளில் இருந்து, அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிச் சென்ற  3 உழவு இயந்திரங்கள் தொடர்பான வழக்கு இன்று செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் விசாணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

3 உழவு இயந்திர உரிமையாளர்களுக்கு தலா 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்த நீதவான், மணலை அரசுடமையாக்குமாறு உத்தரவிட்டார்.

இனிவரும் காலங்களில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றினால், வாகனம் அரசுடமையாக்கப்படும் என நீதிவான் அறிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X