2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

சமூகசேவைகளுக்காக சுமார் 4 இலட்சம் ரூபாய் அன்பளிப்பு

Kogilavani   / 2017 மே 05 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எஸ்.என்.நிபோஜன்

கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தினால், மாவட்டத்தின் சமூகசேவை செயற்பாடுகளுக்காக கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இவ் வருடம் ஏப்ரல் மாதம் வரையிலான காலப்பகுதியில் மட்டும் 4 இலட்சத்து 86 ஆயிரத்து 200 ரூபாய் நிதி, அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளதாக, கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் கனகையா மதனரூபன் தெரிவித்துள்ளார்.

மாவட்ட பாடசாலைகளின் கல்வி மேம்பாட்டுக்கான நிதியுதவி, பாடசாலை விளையாட்டுப்போட்டி நிகழ்வுகளுக்கான நிதியுதவி, உள்ளுர் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்கள் மேலதிக பயிற்சிகளை பெற்றுக்கொள்ளும் முகமாக வெளிநாடு செல்வதற்கான அன்பளிப்பு நிதி, மருத்துவ சேவைக்கான நிதியுதவி, அனர்த்தங்களுக்கான நிதியுதவி, கிளிநொச்சி மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களின் கலாசார நிகழ்வுகளுக்கான அன்பளிப்பு நிதி என குறித்த நிதிகள், சங்க கூட்டத்தின் தீர்மானங்களுக்கு அமைவாக வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் கிளிநொச்சி மாவட்டத்தின் சமூகசேவை செயற்பாடுகளில், கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கம் அக்கறை செலுத்தி,  அதனை சிறப்பான முறையில் முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாகவும், கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் கனகையா மதனரூபன் மேலும் தெரிவித்தார்.         


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .