2025 ஜூலை 30, புதன்கிழமை

சீர்திருத்தக் கட்டளையில் 30 பேர்

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2017 ஜூலை 17 , மு.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக, சமுதாயம் சார் சீர்திருத்தக் கட்டளைக்கு 30 பேர் உட்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுபோதையில் வாகனம் செலுத்தியமை, கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனைகள் தொடர்பில் கைது செய்யப்பட்டமை தொடர்பான வழக்குகளுடன் தொடர்புபட்டவர்களே, இவ்வாறு சமுதாயம் சார் சீர்திருத்த கட்டளைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கட்டளைக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்கள், எதிர்காலத்தில் குற்றங்களிலிருந்து விடுபடும் பொருட்டு, தனிநபர் ஆலோசனைகள், உளவளத்துறை தொடர்பான கருத்தரங்குகள், சமய ஆலோசனைகள், சிரமதானப் பணிகள், நன்னடத்தை தொடர்பான பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என நீதிமன்ற வளாகத்தில் இயங்கி வரும் சமுதாயம் சார் சீர்திருத்தத் திணைக்களம் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .