2025 ஜூன் 30, திங்கட்கிழமை

சான்றிதழ்கள் வழங்கி வைப்பு

Gavitha   / 2015 டிசெம்பர் 17 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவரத்தினம் கபில்நாத்

வவுனியா மாவட்டத்தில் சிவில் பாதுகாப்பு குழுக்களில் சேவையாற்றிய பொது மக்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை (17) வவுனியாவில் இடம்பெற்றது.

வவுனியா பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வில்,  வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த சேனாரட்ன கலந்துகொண்டு சிறப்பித்திருந்ததுடன், நிகழ்வில் வவுனியா மாவட்டத்தில் உள்ள சிவில் பாதுகாப்பு குழுக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை, வவுனியா மகாறம்பைக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 3 கிராமங்களின் சிவில் பாதுகாப்பு குழு பிரதிநிதிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X