Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Niroshini / 2016 மே 05 , மு.ப. 05:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
வவுனியா, செட்டிகுளம் பகுதியில் 15 வயது சிறுமி ஒருவரை கர்ப்பமாக்கிய சந்தேகத்தின் பேரில் 22 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா, செட்டிகுளம், கங்கன்குளம் பகுதியில் வசித்து வந்த 15 வயது சிறுமி ஒருவர் கடந்த சில நாட்களாக மனநிலை குழப்பமடைந்து காணப்பட்டதுடன், கடந்த மூன்று தினங்களாக வீட்டுக்கு வராது அருகில் உள்ள காட்டுப்பகுதியில் தங்கியுள்ளார். இதனையடுத்து, சிறுமியை தேடிய பெற்றோர் செவ்வாய்க்கிழமை குறித்த சிறுமியை கண்டுபிடித்து செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதித்திருந்தனர்.
இதன்போதே குறித்த சிறுமி மூன்று மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட செட்டிகுளம் பொலிஸார் நேற்று அப்பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞன் ஒருவனை கைது செய்துள்ளனர்.
குறித்த இளைஞனை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை செட்டிகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago