2025 ஜூலை 05, சனிக்கிழமை

சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞனுக்கு விளக்கமறியல்; இருவர் தொடர்பில் விசாரணை

George   / 2016 ஜூன் 16 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி நகரை அண்மித்த பகுதியில் வசித்து வரும் 15 வயதுச் சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞனை எதிர்வரும் 29 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா, புதன்கிழமை (15) உத்தரவிட்டார்.

தாய், தந்தை இல்லாத இந்தச் சிறுமி, சிறுவர் இல்லமொன்றில் இருந்து அதன் பின்னர், அம்மம்மா மற்றும் மாமா ஆகியோருடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் மேற்படி இளைஞன், சிறுமியுடன் பழகி கரடிப்போக்குச் சந்திக்கு அண்மித்த விடுதியொன்றுக்கு அழைத்துச் சென்று வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார்.

சிறுமி  கர்ப்பமடைந்ததையடுத்து, விவரம் அறிந்த சிறுமியின் மாமா, கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கடந்த 14 ஆம் திகதி முறைப்பாடு பதிவு செய்தார்.

முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன், சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் கிளிநொச்சியிலுள்ள பத்திரிகை நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் இளைஞன் ஒருவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இளைஞன், கிளிநொச்சி நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜர்ப்படுத்தப்பட்டார். 

அதன்போது, சிறுவர் நன்னடத்தை அதிகாரியுடன் சென்ற சிறுமி நீதிவானின் அறையில் இரகசியமான முறையில் வாக்குமூலமளித்தார். அதன் பின்னர், மேற்படி இளைஞனை நீதவான் விளக்கமறியலில் வைத்தார்.

இந்தச் சம்பவத்தில் குறித்த இளைஞனுக்கு துணையாக மேலும் இரண்டு இளைஞர்கள் செயற்பட்டதாக சிறுமியின் வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தொடர்பிலும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .