2025 ஜூன் 30, திங்கட்கிழமை

சிவபாத கலையகத்தை கவனிக்க ஆளில்லை

Menaka Mookandi   / 2016 ஏப்ரல் 04 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

ஏ - 9 வீதி கிளிநொச்சி வீதி திருமுறிகண்டியை அண்மித்த பகுதியில் அடிப்படைகள் வசதிகளற்ற நிலையில் இயங்கி வருகின்ற சிவபாத கலையகம் எனப்படும் பாடசாலைக்கு சிறுவர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், இன்று திங்கட்கிழமை (04) நேரில் சென்று பார்வையிட்டார்.

இந்தப் பாடசாலையில் மாணவர்கள் கல்வி கற்பதற்கு வகுப்பறைகள், தளபாடங்கள் உட்பட எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை. இது தொடர்பில் பாடசாலை நிர்வாகம், அதிகாரிகளிடம் பல தடவைகள் தெரிவித்தும், அது தொடர்பில் அதிகாரிகள் அக்கறை செலுத்தவில்லை.

கிளிநொச்சியிலுள்ள பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட பல அபிவிருத்தித்திட்டங்களில் இந்தப் பாடசாலையானது புறக்கணிக்கப்பட்டது. பாடசாலை வகுப்பு நேரத்தில் பெரும்பாலும் நிலத்திலேயே அமர்ந்து மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கையை முன்னெடுக்கின்றனர்.

இந்நிலையில்,  இது தொடர்பில் இராஜாங்க அமைச்சருக்கு அறிவிக்கப்பட்டது. அதனையடுத்து குறித்த பாடசாலைக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.

மாகாண அரசாங்கத்தின் கீழ், இந்தப் பாடசாலை வருவதால் மத்திய அரசாங்கத்தின் மூலம் அபிவிருத்தி நடவடிக்கை மேற்கொள்ள முடியாததை சுட்டிக்காட்டிய அமைச்சர், மாகாண கல்வி அமைச்சின் செயலாளருடன் தொடர்புகொண்டு உரிய அதிகாரிகள் ஊடாக பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளதாகவும் கூறினார்.

2009ஆம் ஆண்டு மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பின்னர் இந்தப் பாடசாலையில் எவ்வித அபிவிருத்திகளும் மேற்கொள்ளப்படவில்லையென பெற்றோர்கள் கூறுகின்றனர்.

1983ஆம் ஆண்டு தெற்கில் இடம்பெற்ற வன்செயல்களால் பாதிக்கப்பட்டு (குறிப்பாக மலையக மக்கள்) இடம்பெயர்ந்த மக்கள் இந்தப் பகுதியில் வசித்தனர். அந்த மக்களின் பிள்ளைகளின் கல்வியைக் கருத்திற்கொண்டு இந்தப் பாடசாலையானது ஆரம்பிக்கப்பட்டதுடன் சிங்கள வன்செயல்களால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கான கலையகம் என பெயரிடப்பட்டது.

காலப்போக்கில் பாடசாலையின் பெயரிலுள்ள சிக்கல் தன்மையைக் கருத்திற்கொண்டு, ஒவ்வொரு சொற்களிலும் முதல் எழுத்துக்களை இணைத்து சிவபாத கலையகம் என பெயர் மாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X