Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Gavitha / 2016 நவம்பர் 07 , மு.ப. 06:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.றொசேரியன் லெம்பேட்
இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு, பல இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கக்கட்டிகளை கடத்தும் முயற்சியில் ஈடுபட்ட இருவரை, கடற்படையினர் திங்கட்கிழமை (07) கைது செய்துள்ளனர்.
குறித்த இருவரும், சுமார் 5 கிலோ கிராமுக்கும் அதிகமான எடை கொண்ட தங்க கட்டிகளை, தலைமன்னாருக்கு மேற்கு பகுதியிலுள்ள கடற்பரப்பில் வைத்து மீன்பிடி படகொன்றின் மூலம் கடத்தும் போது கடற்படையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர், மன்னாரைச் சேர்ந்தவரென்றும் மற்றையவர் சிலாவத்துறையைச் சேர்ந்தவரென்றும் கடற்படை தெரிவித்துள்ளது.
கடற்படையினருக்கு கிடைத்த விசேட தகவலினடிப்படையில், குறித்த இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு,பெறுமதி வாய்ந்த தங்கக்கட்டிகளும் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட குறித்த இருவரையும் யாழ்ப்பாணம் சுங்க திணைக்கள அதிகாரிகளிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைத்துள்ளதாக கடற்படையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
23 minute ago
41 minute ago