2025 ஜூன் 30, திங்கட்கிழமை

தங்கூசி வலைகளை அழிக்குமாறு உத்தரவு

Niroshini   / 2016 ஏப்ரல் 30 , மு.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, பூநகரி கடற்பகுதியில் தடைசெய்யப்பட்ட தங்கூசி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட மூவருக்கு தலா ஐயாயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்து, கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராசா வெள்ளிக்கிழமை (29) உத்தரவிட்டார்.

அத்துடன், கைப்பற்றப்பட்ட வலைகளை அழிக்குமாறும் உத்தரவிட்டார்.

கிளிநொச்சி, பூநகரி கடற்பகுதியில் தடைசெய்யப்பட்ட தங்கூசி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட மூவரை கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகள் கைதுசெய்து அவர்களுக்கு எதிராக கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்தனர்.

வெள்ளிக்கிழமை (29) வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே நீதவான் இவ்வாறு உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X