2025 மே 05, திங்கட்கிழமை

தனுஷ்கோடிக்கு அகதிகளாகச் சென்ற நான்கு தமிழர்கள்

Freelancer   / 2022 ஜூன் 30 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

லெம்பர்ட்

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும்  பொருளாதார நெருக்கடி காரணமாக வவுனியா மாவட்டத்தில் இருந்து நான்கு பேர் இன்று காலை அகதிகளாக தனுஷ்கோடியை சென்றடைந்துள்ளனர்.

இவர்களை  மீட்ட மரைன் பொலிஸார்  ராமேஸ்வரம் மரைன் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணைக்கு பின்னர் 4 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்படுவார்கள்.

இவர்கள், வவுனியாவில் இருந்து மன்னாரிற்கு வந்து, மன்னாரில் இருந்தே படகு மூலம் தனுஷ்கோடியை வந்தடைந்ததாக தெரிவித்தனர்.

தற்போது வரை இலங்கை தமிழர்கள் 96 பேர் அகதிகளாக  தமிழகம் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X