2025 ஜூன் 30, திங்கட்கிழமை

தனியார் பஸ் சாரதிகள் பணிப்பகிஸ்கரிப்பு

Niroshini   / 2016 மார்ச் 30 , மு.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்கு போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் இன்று புதன்கிழமை (30) பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக வெளிமாவட்டங்களுக்கான போக்குவரத்துச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இலங்கைப் போக்குவரத்துச் சபை பஸ் சாரதிக்கும் தனியார் பஸ் சாரதி ஒருவருக்கும் இடையில் வவுனியாவில் செவ்வாய்க்கிழமை (29) இடம்பெற்ற கைகலப்புக் காரணமாக இலங்கைப் போக்குவரத்துச் சபை சாரதி காயமடைந்தார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய தனியார் பஸ் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.  

இலங்கை போக்குவரத்துச் சபையினர் தங்களுடன் அடிக்கடி முரண்படுவதாகவும் இதனால் தாங்கள் ஒழுங்காக சேவையாற்ற முடிவதில்லையெனவும் கூறியே, தனியார் பஸ் சாரதிகள், நடத்துநர்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தங்களுக்கு 60சதவீத சேவையாற்றும் வாய்ப்பும் போக்குவரத்துச் சபையினருக்கு 40 சதவீத சேவையாற்றும் வாய்ப்பும் வடமாகாண போக்குவரத்து அமைச்சால் வழங்கப்பட்ட போதும், போக்குவரத்துச் சபையினர் அதனை மீறிச் செயற்படுகின்றனர். இதனாலேயே முரண்பாடுகள் ஏற்படுகின்றன.

எனவே,  இந்தப் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணப்படவேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X