2025 ஜூன் 30, திங்கட்கிழமை

தமிழக மீனவர்கள் நால்வருக்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 22 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மார்க் ஆனந்த், எஸ்.றொசேரியன் லெம்பேட்

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் நேற்று திங்கட்கிழமை இரவு 9 மணியளவில் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்துக் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் நால்வரையும் எதிர்வரும் ஜனவரி மாதம் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் மாவட்ட நீதவான் ஆசிர்வாதம் கிரேசியன் அலெக்ஸ்ராஜா, இன்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.

தலைமன்னார் கடற்பரப்பினுள் படகு ஒன்றில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, கடல் றோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கடற்படையினரினால் குறித்த தமிழக மீனவர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் உடனடியாக தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச்செல்லப்பட்ட நிலையில் இன்று (22) காலை மன்னார் மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் குறித்த மீனவர்கள், மன்னார் மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதன்போது, அங்கு வருகை தந்தை இந்திய துணைத்தூதரக அதிகாரிகள் குறித்த மீனவர்களை பார்வையிட்டதோடு அவர்களிடம் முறைப்பாட்டையும் பதிவு செய்தனர்.

பின்னர் குறித்த மீனவர்கள், மன்னார் மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்களஅதிகாரிகளினால் இன்று (22) மதியம் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X