2025 ஜூன் 30, திங்கட்கிழமை

தமிழக மீனவருடைய சடலம் மன்னாரில் அடக்கம்

Gavitha   / 2015 டிசெம்பர் 16 , மு.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

தலைமன்னார் கடற்பரப்பில் கடந்த 04ஆம் திகதி மீட்கப்பட்ட ஆணுடைய சடலம், நேற்று செவ்வாய்க்கிழமை (15) மன்னாரில் இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது.

யாழ்.இந்திய துணைத்தூதரகத்தின் அதிகாரி முன்னிலையில், பொலிஸாரின் பாதுகாப்புடன் குறித்த சடலம் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்த சடலம், கடந்த 04ஆம் திகதி தீடை எனப்படும் மண் திட்டிலிருந்து மீட்கப்பட்டு, மன்னார் பொது வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த சடலத்துக்குரிய நபர், தமிழகத்தைச் சேர்ந்த இஸ்லாமிய மீனவரான யாகீர் உசைன் என அடையாளம் காணப்பட்ட நிலையில், அந்த சடலத்தை தமிழகத்துக்கு  அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

எனினும் சடலம் உருக்குலைந்து காணப்பட்டமையினால், அதனை தமிழகத்துக்கு அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டிருந்தது. இதனையடுத்து,  சடலத்தை மன்னாரில் இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய இந்திய தூதரகம் முடிவு செய்;திருந்தது.

இதன்படி நேற்று செவ்வாய்கிழமை மாலை 4:30 மணியளவில்,  மன்னார் பொது வைத்தியசாலையிலிருந்து ஜனாசா அடக்கத்துக்காக எடுத்து செல்லப்பட்டு, மன்னார் உப்புக்குளம் ஜூம்மா பள்ளிவாசலில் இஸ்லாமிய சடங்குகளுக்கு பின், உப்புகுளம் மையவாடியில் 5:30 மணியளவில் அடக்கம் செய்யப்பட்டது.   

கடந்த மாதம் 28ஆம் திகதி தமிழகத்திலிருந்து கடற்றொழிலுக்குச் சென்ற 4 தமிழக மீனவர்கள் காணாமல் போயிருந்த நிலையில் குறித்த சடலம் கடந்த 4ஆம் திகதி மீட்கப்பட்டு, மன்னார் பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X