2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

தயா மாஸ்டருக்கு விளக்கமறியல்

Niroshini   / 2016 ஓகஸ்ட் 10 , பி.ப. 01:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

விடுதலைப்புலிகளின் ஊடக இணைப்பாளராக இருந்த தயா மாஸ்டர் என்றழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதியை நாளை வியாழக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா மேல் நீதிமன்றம் இன்று(10) உத்தரவிட்டுள்ளது.

விடுதலைப்புலிகளின் ஊடக இணைப்பாளராக இருந்த தயா மாஸ்டருக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றத்தில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் இன்று புதன்கிழமை, தாக்கல் செய்யப்பட்ட ஒரு வழக்கில் அவரை நிபந்தனையுடன் கூடிய பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

ஆயினும், நான்கு சரீரப் பிணை வழங்குபவர்களை நீதிமன்றம் பார்வையிட வேண்டும் எனவும்  அவர்களை நாளை வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராக்குமாறு உத்தரவிட்டதுடன், அதுவரையில் தயா மாஸ்டரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .