2025 ஜூன் 30, திங்கட்கிழமை

தென்னிலங்கை மீனவப்படகுகள் விரட்டியடிப்பு

Menaka Mookandi   / 2016 ஏப்ரல் 04 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு, மாத்தளன் பகுதிக்கு, சாலைப் பகுதியூடாக ஞாயிற்றுக்கிழமை (03) இரவு ஊடுருவ முனைந்த தென்னிலங்கையைச் சேர்ந்த 6 படகுகளை முல்லைத்தீவு மீனவர்கள் விரட்டியுள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் கடலட்டை பிடிக்கும் நோக்கில் வந்த 9 படகுகளில் 6 படகுகளே இவ்வாறு விரட்டப்பட்டுள்ளன.

குறித்த படகுகளில் சட்டவிரோத கடலட்டை பிடிப்பாளர்கள் இரவோடு இரவாக மாத்தளம் பகுதிக்கு வந்து இறங்கியுள்ளனர். 3 படகுகள் வந்து இறங்கியதைக் கண்ட முல்லைத்தீவு மீனவர்கள், மிகுதிப் படகுகளை தடுத்து நிறுத்தி, அவர்களைத் திருப்பி அனுப்பியுள்ளனர்.

சட்டவிரோத கடலட்டை பிடிப்போரால் தங்களின் மீன்வளம் அழிக்கப்பட்டு, வாழ்வாதாரம் கேள்விக் குறியாக்கப்படுவதாகவும், இவர்களைத் தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இல்லாவிட்டால் தாங்களே அவர்களை விரட்டியடிக்கும் நிலையேற்படும் என மீனவர்கள் கூறுகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X