2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

துரித நடவடிக்கைக்குழுவுக்கு புதிய பிரதிநிதி

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 04 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

வடமாகாண மீள்குடியேற்றம் தொடர்பான துரித நடவடிக்கைக்குழுவின் வடமாகாண பிரதிநிதியாக வன்னியின்  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முத்தலிபாபா பாரூக் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், நியமனக்கடிதம் நேற்று புதன்கிழமை வழங்கப்பட்டது.

நீர்வழங்கல்; மற்றும் வடிகால் அமைப்பு அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்ஸிம் காங்கிரஸின் தேசிய தலைவருமான  ரவூப் ஹக்கிமினால் இவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மன்னார் மூர்வீதியிலுள்ள அவரது இல்லத்தில நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் முத்தலீப்பாபா பாரூக் தெரிவிக்கையில், 'வடமாகாணத்தின் மீள்குடியேற்றம்   துரிதகதியில் இடம்பெற வேண்டும் என்பதற்காக வடமாகாண மீள்குடியேற்ற துரிதகுழு ஏற்கெனவே கூட்டப்பட்டிருந்தது. இதன்போது வடமாகாண முதலமைச்சர், வடமாகாண ஆளுனர், அமைச்சர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

வடமாகாணத்தின் மீள்குடியேற்றத்துக்கு  வடமாகாண முதலமைச்சர் மற்றும் வடமாகாண ஆளுனர் ஆகியோர் இணைத்தலைவர்களாக இருந்து இவ்வாறான மீள்குடியேற்றங்கள் தொடர்பில் திட்டங்களை மேற்கொள்வார்கள்.

முஸ்ஸிம் காங்கிரஸின் சார்பாக எமது தலைவர் குறித்த கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாத நிலையில், அவர் சார்பாக நியமிக்கப்பட்டுள்ள வடமாகாண மீள்குடியேற்றம் தொடர்பான துரித நடவடிக்கைக்குழுவின் வடமாகாண பிரதிநிதியாக நான் அங்கு கலந்து கொள்வேன்.


எதிர்வரும் காலங்களில் மீள்குடியேற்றம் தொடர்பாக இடம்பெறும் விசேட கலந்துரையாடல்களில் நானும் கலந்து கொள்வேன்' என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X