Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Niroshini / 2015 டிசெம்பர் 20 , மு.ப. 10:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நவரத்தினம் கபில்நாத்
துவேசப் பிரசாரங்களை முன்னெடுக்கப்படுவதை நல்லாட்சிக்கான தேசிய அரசாங்கம் இனியும் அனுமதிக்கக் கூடாது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் தெரிவித்தார்.
அவர் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
அனைத்து மக்களினதும் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை. இருப்பினும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் எனும் அடிப்படை உரிமையை ஒரு கேடயமாக வைத்து பொறுப்பற்ற வகையில், உண்மைக்குப் புறம்பாக சில இனக்குழுக்களை அல்லது சமயங்களை அல்லது சமயத் தலைவர்களை இலக்காகக் கொண்டு துவேசப் பிரசாரங்களை முன்னெடுக்கப்படுவதை நல்லாட்சிக்கான தேசிய அரசாங்கம் இனியும் அனுமதிக்கக் கூடாது.
எனவே, நாட்டில் நிலையான இன நல்லிணக்கத்தை உருவாக்கி மீண்டும் பயங்கரவாதம் மற்றும் இனப்பிரச்சினைகள் தோன்றாமல் இருக்க, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட குற்றவியல் தண்டனை சட்ட மூலம் உடனடியாக நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago