2025 ஜூலை 14, திங்கட்கிழமை

நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல்

George   / 2017 ஏப்ரல் 03 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, கரைச்சி, புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பங்குனி உத்திரப்பொங்கல் விழா, எதிர்வரும் 9 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வுக்காக, விளக்கு வைத்தலுடன் ஞாயிற்றுக்கிழமை (02) ஆரம்பமாகிய சடங்குகள், பாரம்பாரிய முறைப்படி தென்மராட்சி, மீசாலை, புத்தூர் சந்தி, பண்டமரவடியில் இருந்து படைப்பண்டம் எடுத்து வருவதற்காக, மாட்டுவண்டில்கள் ஆலயத்திலிருந்து புறப்பட்டுச் சென்றன.

படைப்பண்டம் எடுத்து வரப்பட்டு 9ஆம் திகதி இரவு பொங்கல் விழா நடைபெறும்.

ஆலய பொங்கல் விழாவுக்கான போக்குவரத்து ஒழுங்குகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட சகல ஏற்பாடுகளும் வழமைபோன்று, மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .