2025 ஜூன் 30, திங்கட்கிழமை

நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி சிறுபோகம் செய்யுங்கள்

Princiya Dixci   / 2016 ஏப்ரல் 05 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் குளங்களின் நீரை சிக்கனமான முறையில் பயன்படுத்தி சிறுபோக நெற்செய்கையை சிறப்பாக மேற்கொள்ள வேண்டுமென கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் நவரத்தினம் சுதாகரன் தெரிவித்தார்.

கிளிநொச்சி புதுமுறிப்பு குளத்தின் கீழான சிறுபோக நெற்செய்கைக் கூட்டம், நேற்று திங்கட்கிழமை (04) நடைபெற்ற போது, அதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். 

அவர் தொடர்ந்து கூறுகையில்,

புதுமுறிப்புக் குளத்தில் கடந்த ஆண்டு பல்வேறு வேலைத்திட்டங்களை மேற்கொண்டுள்ளோம். அதேபோன்று இவ்வாண்டும் வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளவுள்ளோம். இக்குளம் 2 அடி உயர்த்தப்பட்ட பின்னர் கூடுதலான நிலப்பரப்பில் சிறுபோகம் செய்யக்கூடியதாக இருக்கும். இக்குளத்திலிருந்து நாள்தோறும் நீர் வெளியேறிக்கொண்டிருக்கின்றது. 

இந்தக் குளத்தின் மூலம் சிவநகர், சோலைநகர், ஜெயந்திநகர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு நீர் வழங்கவேண்டியுள்ளது. குளமானது அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள போதிலும், வாய்க்கால் வேலைகள் செய்ய வேண்டியுள்ளன என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X