2025 ஜூன் 30, திங்கட்கிழமை

நெற்பயிர்ச் செய்கையில் வெட்டுக்கிளியின் தாக்கம் அதிகரிப்பு

Niroshini   / 2016 மார்ச் 04 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

வன்னி மாவட்டத்தில் இம்முறை மேற்கொள்ளப்பட்டுள்ள பெரும்போக நெற்பயிர்ச் செய்கையில் வெட்டுக்கிளியின் தாக்கம் அதிகரித்துள்ளதாகவும் இதனால் விவசாயிகள் பாரிய நஸ்டத்தை எதிர்நோக்கியுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஸ்டஈட்டை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் இம்முறை பல்வேறு எதிர்பார்ப்புக்களுடன் பெரும்போக நெற்செய்கையினை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த விவசாயிகள் அறுவடைக்காக காத்திருக்கும் நேரத்தில் தற்போது நெற்பயிர்ச் செய்கையில் வெட்டுக்கிளியில் தாக்கம் அதிகரித்துள்ளது.

இதனால் விவசாயிகள் பாரிய நஸ்டத்துக்கு முகம் கொடுத்துள்ளனர். விவசயிகள் தமது விவசாய நடவடிக்கைகளுக்காக மேற்கொண்டுள்ள காப்புறுதியை வழங்க காப்பறுதி நிறுவனங்கள் மறுத்து வருகின்றன.

இதனால் பாதிக்கப்பட்ட மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பல்வேறு துயரங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

எனவே, பாதிக்கப்பட்ட வறிய விவசாயிகளுக்கு உடனடியாக நஸ்டஈட்டை வழங்க வேண்டும் என்பதோடு, எதிர்வரும் காலங்களில் விவசாயிகள் இவ்வாறான பாதிப்புக்களில் இருந்து தமது விவசாய நடவடிக்கைகளை பாதுகாக்க அரசாங்கம் விசேட திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X