2025 ஜூன் 30, திங்கட்கிழமை

நிறைவடையும் நிலையிலுள்ள கட்டடப்பணிகள்

Niroshini   / 2016 மே 06 , மு.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி பூநகரிப் பிரதேச செயலகத்தின் புதிய கட்டடப்பணிகள் நிறைவுக் கட்டத்தை நெருங்கியுள்ளன.

பூநகரிப் பிரதேச செயலகத்துக்கென்று நிரந்தரக் கட்டடம் இல்லாதநிலையில் 1990இற்குப் பின்னர் பூநகரிப் பிரதேச செயலகம் ஜெயபுரம் உட்பட பலவிடங்களில் இடம்பெயர்ந்து இயங்கிவந்தது.

எனினும் 2009ஆம் மீள்குடியேற்றத்தின் பின்னர் பூநகரி வாடியடிச் சந்தியிலிருந்து ஒருகிலோமீற்றர் தூரத்தில் தற்காலிகமான இடத்தில் இயங்கிவருகின்றது.

2009ஆம் ஆண்டின் பின்னர் மீள்குடியேற்றத் தொடக்கத்தில் 'என்றிப்' திட்டத்தின் கீழ் பூநகரிப் பிரதேச செயலகத்துக்கான நிரந்தரக் கட்டடம் பூநகரி வாடியடியில் அமைக்கப்படவிருந்தபோதிலும் ஒரு சில காரணங்களால் ஒதுக்கப்பட்ட நிதி திறைசேரிக்குத் திரும்பியது. இதனால் பூநகரி பிரதேச செயலகத்துக்கான நிரந்தரக் கட்டடப்பணிகள் மூன்றாண்டுகளுக்கு மேலாக ஆரம்பிக்கப்படாமலிருந்தது.

கிளிநொச்சி மாவட்டச் செயலகம் எடுத்த நடவடிக்கைகள் காரணமாக கிடைக்கப்பெற்ற 15 மில்லியன் ரூபாயில் பூநகரி பிரதேச செயலகக் கட்டடப்பணிகள் கடந்த ஆறு மாதங்களாக வேகமாக நடைபெற்று வருகின்றன.

பூநகரி பிரதேச செயலகம் தனது சொந்த இடத்தில் இயங்கத் தொடங்கினால் பூநகரி பிரதேச செயலக கிராம அலுவலர் பிரிவுகளின் மக்கள் பூநகரி பிரதேச செயலகத்துக்கு போக்குவரத்துச் செய்வது இலகுவாக அமையும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X