2025 ஜூன் 30, திங்கட்கிழமை

பனங் கைப்பணிப் பயிற்சி ஆரம்பம்

George   / 2016 ஏப்ரல் 08 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.நேசமணி

பனை அபிவிருத்திச் சபையினால், விசுவமடு பனை தென்னைவள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்க அங்கத்தவர்களின் குடும்பங்களைச் சார்ந்த 25 பெண்களுக்கு பனங் கைப்பணிப் பயிற்சிநெறியொன்றை கடந்த 4ஆம் திகதி முதல் சங்கத்தில் ஆரம்பித்துள்ளதாக சங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பனை அபிவிருத்திச் சபை தலைவர் மா.கணபதிப்பிள்ளை இந்த பயிற்சி நெறியை ஆரம்பித்து வைத்தார்.

பயிலுனர்களுக்கு, பயிற்சிக்காலமான 3 மாதங்களுக்கும் மூலப்பொருள் மற்றும் உபகார கொடுப்பனவை உள்ளடக்கிய பயிற்சிக்காலக் கொடுப்பனவாக மாதாந்தம் 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று பனை அபிவிருத்திச் சபைத் தலைவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X