Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2017 செப்டெம்பர் 11 , மு.ப. 11:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ். அரசரட்ணம், சுப்ரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி பூநகரிப் பகுதியில், வாகனம் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில், சைக்கிளில் பயணித்த பெண்ணெருவர் உயிரிழந்துள்ளதுள்ளதுடன், வாகனத்தில் பயணித்த ஏனையோர் சிறுகாயங்களுக்குள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
பரந்தன் - பூநகரி வீதியூடாக, இன்று காலை (11) பயணித்துக் கொண்டிருந்த வாகனமொன்று, 10ஆம் கட்டைப் பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்டுள்ளது. இதேவேளை, வீட்டிலிருந்து வேலைக்காக சைக்கிளில் புறப்பட்ட 40 வயதுடைய பெண்ணெருவர் தலையில் படுகாயடைந்தநிலையில் பூநகரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் அங்கு உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், வாகனத்தில் பயணித்தவர்கள் சிறுகாயங்களுங்குள்ளாகி சிகிச்சை பெற்றுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இவ்விபத்து தொடர்பான விசாரணைகளை, பூநகரிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். இச்சம்பவத்தில், சைக்கிளில் பயணித்த, 40 வயதுடைய சிவகுமார் ஜெகதாம்பாள் என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
41 minute ago
43 minute ago
2 hours ago