2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

போதைப்பொருள் தடுப்புத் திட்டம்

Editorial   / 2017 நவம்பர் 06 , பி.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.தபேந்திரன்

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஏற்பாடு செய்துள்ள, போதையற்ற நாடு தேசிய வேலைத்திட்டத்துடன் இணைந்ததான வட மாகாண போதைப்பொருள் தடுப்பு சமூக மேம்பாட்டு வேலைத்திட்டம், கிளிநொச்சியில், நாளை மறுதினம் (08) நடைபெறவுள்ளது.

இதன்போது, அன்றைய தினம் பிற்பகல் 1 மணிக்கு, கரடிப்போக்கு சந்தியில் போதைப்பொருள் தடுப்பு சமூக மேம்பாட்டு நடைபவனி ஆரம்பமாகி, மாவட்ட கூட்டுறவாளர் மண்டபத்தைச் சென்றடையும்.

இதில் இளைஞர் கழகங்கள், பொது அமைப்புப் பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

இதையடுத்து, போதைப்பொருள் தடுப்புச் சம்பந்தமான கலந்துரையாடல், அன்றைய தினம் பிற்பகல் 2 மணிக்கு, மாவட்ட கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .