2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

பெண்கள் உளவளத்துறை தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு

Niroshini   / 2016 மே 10 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

சிறுவர் மற்றும் பெண்கள் அமைச்சின் ஏற்பாட்டில், கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பெண் தலைமைத்துவக் குடும்ப பெண்களுக்கான உளவளம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு, அமைச்சின் கிளிநொச்சி இணைப்பு அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்றது.

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை உளவள வைத்தியதிகாரி ரி.ஜெகரூபன், உளவளத்துறையில் மாவட்ட இணைப்பாளர் ரி.சுவர்ணமுகி ஆகியோர் வளவாளராகக் கலந்துகொண்டு, பெண்களுக்கான விழிப்புணர்வுகளை மேற்கொண்டார்.

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பெண் தலைமைத்துவப் பெண்கள் உடல், உள ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், பெண்கள் தற்கொலை செய்யும் சம்பவங்களும், அவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சந்தர்ப்பங்களும் அதிகரித்துள்ளன. இதனைக் கருத்திற் கொண்டே இந்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்தப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X