2025 ஜூன் 30, திங்கட்கிழமை

புணி புறக்கணிப்பு கைவிடப்பட்டது

George   / 2016 மே 05 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை போக்குவரத்துச் சேவையின் மன்னார் டிப்போ பணியாளர்கள், வியாழக்கிழமை காலைமுதல்  மேற்கொண்ட பணிப்பகிஸ்கரிப்பு, கைவிடப்பட்டு மதியம் 1.15 மணிமுதல் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

பகல் 12.45 மணிளவில் சம்பவ இடத்துக்கு  வருகை தந்த இலங்கை போக்குவரத்து சபை வட பிராந்திய முகாமையாளர் உப்பாலி, பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்ட பணியாளர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.

வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன், மன்னார் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி அஜந்த றொற்றிகோ ஆகியோரும் இந்த பகிஷ்கரிப்பில் கலந்து கொண்டிருந்தனர்.

எதிர்வரும் 9ஆம் திகதி திங்கட்கிழமை, மன்னார் டிப்போவுக்கு தற்காலிகமாக காணக்காளர் காரியாலயம் ஒன்று உடனடியாக திறக்கப்பட்டு புதிய கணக்காளர் ஒருவர் நியமிக்கப்படுவார் என உறுதியளிக்கப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X