2025 ஜூலை 05, சனிக்கிழமை

புதையல் தோண்டிய 7 பேர் கைது

George   / 2016 ஜூலை 05 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா, போகஸ்வெவ, தந்திரிமலை ஆகிய இடங்களில் அனவசியமான முறையில் புதையில் வேட்டையில் ஈடுபட்ட பெண் உள்ளிட்ட 7 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனனர்.

வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட  உபகரணங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் கஹட்டகஸ்திகிலிய, வவுனியா, களுத்துறை, வென்னப்புவ மற்றும் இங்கிரிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபர்களை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை ஆஜர்செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .