Menaka Mookandi / 2017 மே 19 , மு.ப. 10:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்
புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மன்னார் மாவட்டச் செயலக கடட்டடத் தொகுதியைத் திறந்துவைப்பதற்காக, மன்னாருக்கு இன்று (19) விஜயம் செய்திருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக, காணாமற்போன உறவினர்களால் கறுப்புக் கொடிப் போராட்டமொன்று நடத்தப்பட்டது.
மன்னார் மாவட்டத்தில் காணாமல் போனவர்களது உறவினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, மாவட்டச் செயலகத்துக்கு முன்னால், இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இருப்பினும், போராட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னர், மாவட்டச் செயலக வளாகத்துக்குள் சென்ற பிரதமர் உள்ளிட்ட குழுவினர், மாவட்டச் செயலகத்தைத் திறந்துவைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டுவிட்டு, பின்வாசல் வழியாகவே வெளியேறிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.



12 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
1 hours ago