Editorial / 2023 மே 25 , பி.ப. 07:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மெல் தலைமையில் வியாழக்கிழமை (25) நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் பல்வேறான தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளன.
அதனடிப்படையில், மன்னார் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்வி நிலையங்களின் கல்வி நடவடிக்கைகள் மாலை 6 மணியுடன் நிறைவடைந்து கல்வி நிலையங்கள் மூடப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்வி நிலையங்களின் இயக்குனர்களுடன் அவசர கலந்துரையாடல் வியாழக்கிழமை (25) மாலை 3 மணியளவில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இதன் போது பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
-அவர் மேலும் தெரிவிக்கையில்,,
ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் கல்வி நிலையங்களை காலை 11 மணிக்கு பின்னர் ஆரம்பிக்க வேண்டும்.கிழமையின் ஏழு நாட்களிலும் மாலை 6 மணியுடன் தனியார் கல்வி நிலையங்கள் மூடப்பட வேண்டும்.பதிவு செய்யப்படாத தனியார் கல்வி நிலையங்கள் அவசரமாக பதிவு செய்யப்பட வேண்டும். அவ்வாறு பதிவு செய்யப்படாவிட்டால் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
மேலும் மாணவர்களின் ஒழுக்கம் ஆன்மீகம் போன்றவற்றில் தனியார் கல்வி நிறுவனங்களும் கவனம் செலுத்த வேண்டும். உரிய இருக்கை வசதி,சுத்தமான குடிநீர், சுகாதாரம் போன்றவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெளிவூட்டப்பட்டுள்ளனர். என அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த கூட்டத்தில் சர்வ மதத் தலைவர்கள், மன்னார் பிரதேச செயலாளர் ,உதவி மாவட்ட செயலாளர்,தனியார் கல்வி நிலையங்களின் பிரதிநிதிகள், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
24 minute ago
55 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
55 minute ago
1 hours ago
1 hours ago