2025 ஜூன் 07, சனிக்கிழமை

மன்னார் நகர சபையின் தலைவராக ஜெராட் தெரிவு

எஸ்.றொசேரியன் லெம்பேட்   / 2018 பெப்ரவரி 15 , பி.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் நகர சபையின் தலைவராக, தமிழீழ விடுதலை இயக்கத்தைச் (ரெலோ) சேர்ந்த ஞானப்பிரகாசம் ஜெராட் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக, தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

மன்னாரிலுள்ள விடுதியொன்றில் இன்று (15) இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன், சாள்ஸ் நிர்மலநாதன், வடமாகாண விவசாய அமைச்சர் எஸ்.சிவநேசன், வடமாகாணசபை உறுப்பினர் எஸ்.பிரிமூஸ் சிறாய்வா,  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .